search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்தவ ஆலய காவலாளி"

    மதுரையில் கிறிஸ்தவ ஆலய காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மதுரை:

    மதுரை காதக்கிணறு சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சவரிஜான் போஸ்கோ (வயது 38). இவரது மனைவி மெர்சி (31).

    காதக்கிணறு தேவாலயத்தில் காவலாளியாக வேலை பார்த்த சவரிஜான் போஸ்கோ, அங்குள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சவரிஜான் போஸ்கோ கடந்த 3 நாட்களாக வேலைக்கு வராமல், குடிபோதையில் திரிந்து வந்துள்ளார். இதனால் அவரை கண்டித்த தேவாலய பாதிரியார், ‘நீங்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை. இதனால் உங்களை பணி நீக்கம் செய்வது என்று முடிவு செய்துள்ளோம். எனவே நீங்கள் உடனடியாக வீட்டை காலி செய்யுங்கள்’ என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் சவரிஜான் போஸ்கோ நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக மெர்சி அப்பன் திருப்பதி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×